அண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடிமரத்தில் வெகு விமர்சையாக கொடியோறத்துடன் துவங்கியது.பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ் மிக்க அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியோற்று விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
சைவ ஸ்தலங்களில் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களும் பல விழாக்கள் நடைபெறும். இதில் முக்கியமானது வைகுண்ட வாசல் திறப்பு, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி விழா, ஆனி மாத கொடியேற்றம், ஆனி திருமஞ்சனம், உத்ராயண மற்றும் தட்சிணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம், ஆடிப்புரம், கார்த்திகை தீபம் கொடியேற்றம் ஆகியவை மிக முக்கியமானதாகவும்.குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். மூன்று முறை அண்ணாமலையார் கொடி மரத்திலும், ஆடி பூர பிரம்மோற்சவம் பராசக்தி அம்மன் கொடி மரத்திலும் கொடியேற்றம் நடைபெறும்.
12 மாதங்களில் சூரியன் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தெற்கு நோக்கியும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கியம் நகரும் காலமாக ஆகம நூல்கள் கூறுகின்றது. சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்ராயண புண்ணிய காலமாகும்.
ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் தட்சிணாயிண புண்ணிய காலமாகும். உத்ராயண புண்ணிய காலம் இன்று தொடங்குவதை முன்னிட்டு உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விநாயகர், சந்திரசேகரர், உண்ணாமுலையம்மன் கோயில் கொடி மரத்தின் அருகே எழுந்தருளினார். இன்று காலை 6.15 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இன்று முதல் 10 நாட்கள் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர், பராசக்தி அம்மன் ஆகியோரின் மாடவீதியுலா நடைபெறும். ஜனவரி 15-ம் தேதியன்று திருவண்ணாமலை தாமரை குளத்தில் அண்ணாமலையாரின் தீர்த்தவாரி நடைபெறும்.இன்று நடைபெற்ற கொடி ஏற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.