தமிழகத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ. 1000 வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1 கோடிக்கு மேற்பட்டவர்கள் பயன் அடைந்து வரும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 50 லட்சம் பேரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
தற்போது இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘1.16 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படுகிறது’. ‘விடுப்பட்ட தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமை தொகை விரைவில் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.