முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று (ஏப்.26) முதலமைச்சர் பேசியதாவது:
சட்டசபை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.30,000த்தில் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும். சட்டசபை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.15,000ல் இருந்து, ரூ.17,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.75,000 என்பது ரூ.1.லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கனவே இந்த ஆண்டின் மருத்துவப்படி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ரூ.25,000 விதிகள் திருத்தம் செய்யப்பட்டு வழங்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.