சென்னையில் நேற்று (12ம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.70 ஆயிரத்தை கடந்தது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில வாரங்களாக தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 10ம் தேதி தங்கத்தின் விலை கிராம் -8,560 ரூபாய்க்கும், சவரன்- 68,480 ரூபாய்க்கும் விற்பனையாகின.
நேற்று முன்தினம் (11ம் தேதி) தங்கத்தின் விலை கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து, 8,745 ரூபாயாக அதிகரித்தது. சவரனுக்கு 1,480 ரூபாய் அதிகரித்து, 69,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (12ம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,770க்கு விற்பனை ஆகிறது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலை. ஒரு சவரன் தங்கம் விலை, எப்போதும் இல்லாத வகையில், 70,000 ரூபாயை கடந்து இருப்பது சராசரி மற்றும் நடுத்தர மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.