மத்திய அமைச்சர் முருகனை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்லவிடாமல் தடுத்து அவரை போலீசார் முறையாக அவரை கையாளவில்லை என்று குற்றம்சாட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டி.ஜி.பிக்கு கடித்தால் எழுதியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனை கோயிலுக்கு செல்லவிடாமல் தடுக்க முயற்சித்ததுடன், அவரை போலீசார் மோசமாக கையாண்டுள்ளனர்,” என்று டி.ஜி.பி.,க்கு அனுப்பிய கடிதத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மத்திய அமைச்சர் முருகன் கடந்த 17 ம் தேதி திருப்பரங்குன்றம் வந்த போது, அவரது பாதுகாவலர்களை போலீசார் தவறாக யைாண்டதுடன், அவரை கோயிலுக்குள் நுழைவதை தடுக்கவும் முயற்சி செய்தனர். திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் ஆகிய இரண்டிற்கும் வர மத்திய அமைச்சர் போலீசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தார். இருந்த போதும், கோயில் வாசலில் அவரை போலீசார் மோசமாக கையாண்டது வருத்தம் அளிக்கிறது.
அனுமதி பெற்றும் தன்னை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம் என்று மத்திய அமைச்சர் முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு, கோயிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாக போலீசார் கூறியது இன்னும் வருத்தம் அளிக்கிறது.
ஒரு எம்.பி.யின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ள ஒரு கட்டத்தில், அவர் விரும்பும் இடத்தில் வழிபடும் உரிமையை போலீசார் அப்பட்டமாக தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது பொது மக்கள் இடையே கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது.
சமீப நாட்களாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பீதியடைந்துள்ள பொது மக்கள் இடையே, போலீசாரின் இந்த நடவடிக்கை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு எம்.பி.யும், மத்திய அமைச்சருமான அவருக்கே இப்படியான அவமானம் ஏற்படுகிறதென்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.