வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நகுலன் என்ற 9 வயது ஆண் புலிக்கு கழுத்தின் வலது பக்கத்தில் உள்ள கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த செயல்முறை வாயு மயக்க மருந்துகளின் மூலம் அறுவை சிகிச்சையில் கட்டி கவனமாக அகற்றப்பட்டது. மேலும் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க, கட்டிக்கு செல்லும் இரத்த நாளங்கள் அடைக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னர் நகுலன் புலியை மருத்துவர்களால் கவனமாக கண்காணிக்கப்பட்டது. மறுநாளே வழக்கமாக வழங்கப்படும் உணவு உட்கொண்டு சுறுசுறுப்பாக காணப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்த இடம் நன்றாக குணமடைந்து வருவதாகவும், தற்போது புலி நன்றாக உள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.