தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள், மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம்,தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் எம்.பி.ஆ.ராசா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.