பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு நடத்தி வந்தது.
இந்த நிலையில், பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதுதொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்துள்ளது.