கடந்த 264 ஆண்டுகளுக்கு முன்பாக பிரஞ்சு- ஆங்கிலேயே படைக்கு இடையே நடந்த போர் நினைவு தின நிகழ்ச்சி வந்தவாசியில் தெற்கு காவல் நிலையத்தில் உள்ள பீரங்கி முன்பாக நடைபெற்றது.
பிரஞ்சு – ஆங்கிலேயே படைக்கு இடையே கடந்த 1760 ஆண்டு நடந்த போரில் ஆங்கிலேயே படை வெற்றி பெற்று இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அமைவதற்கு அடித்தளமாக அமைந்தது என்பது வரலாறு. இந்த போர் குறித்து என்னோரா சங்கம் சார்பில் கருத்தரங்கம் மற்றும் வந்தவாசி பேரில் பயன்படுத்திய பீரங்கி தெற்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள இடத்தில் மாணவர்களுக்கு போர் குறித்த விபரம் தெரிவிப்பதற்கான நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாைல நடந்தது.
சங்க தலைவர் மலர் சாதிக் தலைமை தாங்கினார். செயலாளர் வி.எல்.ராஜன், நிர்வாகிகள் பிரபாகரன், குமரன் டிஎல்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தாசில்தார் பொன்னுசாமி, டிஎஸ்பி ராஜீ, விழுப்புரம் தொல்லியல் துறை சார்ந்த காப்பாட்சியர் அ. ரஷீத்கான் ஆகியோர் கலந்து கொண்டு வந்தவாசி போர் குறித்த செயல்பாடுகளை விளக்கி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் காவல் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமு, கவிதா, பாபு, தட்ணாமூர்த்தி, தனிப்பிரிவு ஏட்டு எல்லப்பன் உள்ளிபட பலரும் கலந்துகொண்டனர். முடிவில் ரெட்கிராஸ் சங்க செயலாளர் பா.சீனுவாசன் நன்றி கூறினார்.