செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் ஊராட்சியில் பாக்கம், தாதங்குப்பம், வயலூர், ஒழுப்பாக்கம், ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில் உள்ள கிராமத்தில் இந்த ஆண்டு முழுமையாக100 நாள் வேலை திட்டத்தில் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கிராம மக்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அதிகாரியில் கண்டுகொள்ளவில்லை எனக் கூறி இரு தேசிய நெடுஞ்சாலைகளில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்பொழுது மேல்மருவத்தூர் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அதிகாரிகள் வரும் வரை சாலை மறியலை கைவிடமாட்டோம் என கிராம கூட்டு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.