ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (நவம்பர் 20) பிற்பகல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இந்த சூழலில் நீதிமன்றத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை உடனிருந்த வழக்கறிஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது இந்த வன்முறையை கண்டித்து வழக்கறிஞ்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.