விருத்தாசலத்தில் திருக்கோயில்கள் சார்பில் நான்கு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
விருத்தாசலம், விருதகிரிஸ்வரர் திருக்கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் இலவச திருமண விழா நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் நான்கு ஜோடிகளுக்கு விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் கடலூர் சந்திரன் மற்றும் செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
மணமக்களுக்கு திருமாங்கல்யம் உள்ளிட்ட 60 ஆயிரம் மதிப்பிலான அனைத்து விதமான சீர்வரிசை பொருட்களும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டன.
திருக்கோயில்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.