கடலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பேரணி திருப்பாதிரி புலியூர் ஜவான்ஸ் பவன் அருகில் கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
விழிப்புணர்வு பேரணியில் பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அரசுப் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.
பேரணி ஜவான்ஸ் பவனில் ஆரம்பித்து பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் சுந்தர் மற்றும் மாவட்ட குழந்தை நல குழு தலைவர் லட்சுமி வீரராகவலு, காவல் ஆய்வாளர்கள் வள்ளி, தீபா, ஜோதி, ரேவதி, ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் சுந்தரி, . சுடர்மதி சிறப்பு உதவி ஆய்வாளர் ஹென்றிராஜன், மற்றும் காவல் ஆளினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.