கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ்165 பயனாளிகளுக்கு வீடுகளுக்கு பழுது நீக்கம் உத்தரவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ன்றியத்திற்கு உட்பட்ட 45 கிராம பஞ்சாயத்துகளிலும் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் நடந்தது.
விழாவிற்கு மாவட்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் பூ.அய்யாக்கண்ணு, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஆணையாளர் பா.விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 45 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஊரக பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் 165 பயனாளிகளுக்கு வீடுகளுக்கு பழுது நீக்கம் உத்தரவு மற்றும் 36பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வேலைக்கான பணிக்கான ஆணை வழங்கினார்.
இதில் ஒன்றிய பொறியாளர்கள், துணை மற்றும் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) எஸ்.அருணாசலம் நன்றி கூறினார்.