ஈரோட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஆஞ்சநேயர் வார வழிபாட்டு குழு சார்பில் 60 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

வார வழிபாட்டு குழுத்தலைவர் குமார் கூறியதாவது
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு எங்கள் வார வழிபாட்டுக்குழு 36 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் வகையில் 60 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்டோர் ஈடுபட் டுள்ளனர்.
லட்டு தயாரிக்க 2,000 கிலோ சர்க்கரை, 1,000 கிலோ கடலை மாவு, 40 கிலோ முந்திரி, 100 கிலோ திராட்சை, 50 டின் ஆயில் பயன்படுத்தப்படவுள்ளது. 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் செந்துாரம், மஞ்சள் கயிறு, துளசி போன்றவற்றை பேக்கிங் செய்யும் பணியும் நைடபெற்று வருகிறது என கூறினார்.