புதுச்சேரி மாநிலத்தில் அரசுத்துறை ஆவணங்களில் இணைக்கப்பட்டு உள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்களை தனிநபர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுத்துறை ஆவணங்களில் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் எண்ணை அரசின் பல்வேறு சேவைகளுக்கு இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இணைக்கப்பட்டுள்ளது. அதை அரசுத் துறைகளில் பல்வேறு இணைய வழி ஆவணம் மற்றும் கோப்புகளில் இணைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக நீக்க புதுச்சேரி அரசு திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை உத்தரவிட்டு அனைத்து அரசு துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு துறைகளில் இணைய வழி ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் ஆதார் எண் வெளிப்படையாக பகிரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அரசு துறை ஆவணங்களில் இணைத்துள்ள ஆதார் எண்ணை உடனடியாக நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என்றும், அத்துடன் ஆதார் எண்ணை இணைய வழி ஆவணங்களை இணைத்துள்ள மீன்வளத்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
தனி நபரின் பாஸ்போர்ட், பான் கார்டு எண், வங்கிக் கணக்கு எண், போல் ஆதார் எண்ணும் ஒருவரின் தனிப்பட்ட விவரமாகும் அந்த எண்களை பொது வெளியில் பகிர்வதால் பல்வேறு பாதிப்புகள் தனிப்பட்ட நபருக்கு ஏற்படுவதாகவும், ஆதார் விபரங்களை மற்றவர்களுக்கு பகிர்வது ஆதார் ஆணைய சட்டம் 2016 இன் படி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அடுத்தவர் ஆதார் எண்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என ஆதார் ஆணையும் எச்சரித்துள்ளது.