திண்டுக்கல் அருகே யானைகள் சண்டையிட்டபோது உடைந்து விழுந்த யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை கன்னிவாடி வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் – நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு அருகே யானைத்தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருச்சி வனக்காவல் நிலையப்பணியாளர்கள், திண்டுக்கல் வனப்பாதுகாப்புப்படை மற்றும் சிறுமலை வனச்சரகப் பணியாளர்கள் இணைந்து திண்டுக்கல் – நத்தம் சாலையில் ரெட்டியப்பட்டி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, யானைத் தந்தத்தை விற்க முயன்ற திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பழையூரைச் சேர்ந்தவர்கள் பெருமாள்(வயது34), ஜெயக்குமார்(வயது 45), வெங்கடேஷ்(வயது 46) சிலுவத்தூர்ரைச் சேர்ந்த பிரபு(வயது 33), நத்தத்தைச் சேர்ந்த சேகர்(வயது 55), கோபால்பட்டியைச் சேர்ந்த ரெங்கராஜ்(வயது 51), மதரை மாவட்டம் ஆண்டிக்கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோஷி(வயது 61) ஆகிய 7 பேரை கையும் களவுமாக பிடித்து சிறுமலை வனச்சரக அலுவலகத்தில் ஒப்புடைத்தனர்.
பின்னர் கன்னிவாடி மற்றும் சிறுமலை வன பாதுகாப்பு படை பணியாளர்கள் கூட்டு தணிக்கை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டதில், திண்டுக்கல் மேற்கு வட்டம், பன்றிமலை கிராமம், சோலைக்காட்டிற்கு அருகில் உள்ள செங்கடம்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பலா பிஞ்சுகள் சேகரம் செய்ய சென்றபோது யானைத் தந்தம் கிடைத்ததாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், யானைகள் சண்டையிட்டதில் தந்தம் உடைந்து முறிந்து கீழே விழுந்து கிடந்ததை பெருமாள் என்பவர் எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து குற்றம் உறுதி செய்யப்பட்டது.
கன்னிவாடி வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிடிபட்ட 7 பேரை பேரையும் கைத செய்யப்பட்டு கடத்தலுஎகு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் யானை தந்தம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதித்துறை நடுவர் உத்தரவின் பேரில், 5 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.