திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு 20 ஏ.சி. பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படுகிறது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்ததாவது-:
திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்று வர ஏதுவாக சென்னையில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 20 அதிநவீன இருக்கை படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் செயலி (ஆப்), ஆகிய இணையத் தளங்களின் மூலமாக முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலுக்கு 9445014452, 9445014424 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள போக்குவரத்து துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.