ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்.
பழைமை வாய்ந்த பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டையில் அமைந்துள்ள 1036 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகு பெருமாள் கோவிலில் 58 வது வைகுண்ட ஏகதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இந்த ஆலயத்தின் முக்கியமான சிறப்பு திருச்சி ஶ்ரீரங்கம் ஆலயத்தின் விமான கோபுரத்தில் அமைந்துள்ள பிரயோக சக்கர பெருமாள் இந்த அழகு பெருமாள் கோயிலில் கருவறையில் அமர்ந்துள்ளார்.
யானை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்
இந்த அழகு பெருமாள் கோயிலில் நடைபெற்ற இந்த சொர்கவாசல் திறப்பு விழாவில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பசீலா என்ற யானையை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த யானை இந்த கோயிலை 3 முறை சுற்றி வந்து பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்த சொர்க்க வாசல் வழியாக வந்த பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷம் முழங்க வழிபட்டனர். மேலும் இந்த கோயில் 1036 ஆண்டுகள் மிகவும் பழமையான கோயில் என்பதால் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 1000 கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.