தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 8 தனியார் பல்கல்கலைக்கழங்கள் தொடர்பான தனியார் பல்கலைக்கழங்கள் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்த சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து இந்த 2 மசோதாக்களும் தமிழ்நாடு அரசு இதழில் வெளியாகி உள்ளது. மாநில அரசுக்கள் சட்டசபையில் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி 2 மசோதாகளுக்கும் ஒப்புதல் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.