புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் நேற்றும் (மார்ச் 19)அவையில் நடைபெற்றது. அவையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.