சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 4 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த ராமசாமி, தனபால், சின்னசாமி மற்றும் கந்தசாமி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் இந்த நான்கு பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 65 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.