பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்பு பேசிய முதல்வர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.