மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்
கடலூரில் நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக கே.எம்.எஸ் 2023-24 பருவத்திற்கான நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறியதாவது
இந்த ஆண்டு கே.எம்.எஸ் 2023-2024 பருவத்திற்கு தொடக்கமாக கடலூர் மாவட்டத்தில் வட்டம் வாரியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார் கோயில் 34 ஸ்ரீமுஷ்ணம் 35, விருத்தாசலம் 24, சிதம்பரம் -9, திட்டக்குடி 15, புவனகிரி 7, குறிஞ்சிப்பாடி 6, வேப்பூர் 12, கடலூர் 7, பண்ருட்டி 4 ஆக மொத்தம் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடை பகுதிக்கு சென்று 22.01.2024 முதல் விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் திறந்துவைக்கபட்டு செயல்படுத்தப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சன்னா ரகம் (கிரேடு எ) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,310 பொதுரகம் (காமன்) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,265 இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ப.ஜெகதீஸ்வரன், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வி.வ) சு.ரவிச்சந்திரன், நுகர்ப்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.