கல்வித்துறை ஏற்பாடு
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் வழிகாட்டுதல் நிகழ்ச்சயை கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை வழிகாட்டுதலின் படி கடந்த மாதம் அரசு பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் அந்தந்த பாடத்தில் அனுபவமிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு கற்றல் பொருள் கையேடு 5 பாடங்களுக்கும் உருவாக்கப்பட்டு அனைத்து அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக கற்றல் பொருள் கையேட்டினை பயன்படுத்தி எதிர்வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எவ்வாறு எதிர்க்கொள்வது என்பதனை விளக்கும் விதமாக கற்றல் பொருள் கையேட்டினை தயார் செய்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் துணையோடு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களுக்கு நேற்று முதல் 11 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் லாஸ்பேட்டை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம், மாநில பயிற்சி மையம் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி, முதலியார்பேட் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் விதமாகவும், ஐயங்களை கேட்டுதெளிவடையும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை துணை இயக்குநர் (பெண் கல்வி) சிவராமரெட்டி ஆசிரியர்கள் பார்த்தசாரதி மற்றும் பாலசுப்ரமணியன், அன்பரசன் ஆகியோர் செய்திருந்தனர்.