கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (வயது 47). இவர் மனம்பூண்டியில் உள்ள முகையூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உதவி வேளாண்மை அதிகாரியாக வேலை பார்த்துவந்தார். இவருடைய மனைவி தனலட்சுமி.
வெங்கடகிருஷ்ணன் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மணலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வெங்கடகிருஷ்ணன் உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வெங்கடகிருஷ்ணன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.