முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்ப நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய கோரிக்கை விடுத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின் போது துரைமுருகன், அமைச்சர்கள் கே.என்.நேரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
ராமதாஸ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இந்தியாவில் தமிழகத்துக்கு இணையாக NOONLITSS பாதுகாக்கும் சமூக நீதியை மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் அக்.2ஆம் தேதி வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வலியுறுத்தியது.
மாநில உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடந்த” பிரதமரும், உள்துறை அமைச்சுரும் பல்வேறு மேடைகளில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். அதனால்தான் மாநில அரசே நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது. தமிழகத்தில் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் வேண்டும். அதன் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால் இட ஒதுக்கீட்டை 69 சதவீத காப்பாற்ற முடியாது.
தமிழகத்தில் பிசி, எம்பிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை மக்கள் தொகைக்கு இணையாக உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். இதற்கு சட்டப்படியும், அரசியல் ரீதியாகவும் எந்த தடையும் இல்லை. எனவே தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
சந்திப்புக்குப்பின், செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்
“தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய முதல்வரிடம் தெரிவித்தோம். கோரிக்கைகளை ஆய்வு செய்வதாக முதல்வர் தெரிவித்தார்” என்றார்.